என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி
Byமாலை மலர்28 Aug 2017 7:37 AM GMT (Updated: 28 Aug 2017 7:37 AM GMT)
வேலைக்கு, பள்ளிக்கு செல்பவர்களுக்கு தேங்காய்ப்பால் சேர்த்து தக்காளி சாதம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சை பட்டாணி - அரை கப்,
பச்சரிசி 2 கப்,
தேங்காய்ப் பால் - 2 கப்,
வெங்காயம் - 2
தக்காளி - 6,
பச்சை மிளகாய் - 2,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு சேர்த்து உதிராக வேக வையுங்கள்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.
பட்டாணி நன்றாக வெந்து ஓரங்களில் நெய் பிரிந்து வரும் போது சாதத்தை சேர்த்துக் கலக்குங்கள்.
புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.
சூப்பரான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சை பட்டாணி - அரை கப்,
பச்சரிசி 2 கப்,
தேங்காய்ப் பால் - 2 கப்,
வெங்காயம் - 2
தக்காளி - 6,
பச்சை மிளகாய் - 2,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு சேர்த்து உதிராக வேக வையுங்கள்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.
பட்டாணி நன்றாக வெந்து ஓரங்களில் நெய் பிரிந்து வரும் போது சாதத்தை சேர்த்துக் கலக்குங்கள்.
புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.
சூப்பரான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X