என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வேர்க்கடலை பூர்ணம் போளி செய்வது எப்படி
Byமாலை மலர்21 Aug 2017 7:26 AM GMT (Updated: 21 Aug 2017 7:26 AM GMT)
பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வேர்க்கடலையை பூர்ணம் வைத்து சூப்பரான போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சை வேர்க்கடலை - 200 கிராம்,
உருளைக் கிழங்கு - 2,
கேரட் - 2,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
கொத்துமல்லி - சிறிதளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
மைதா மாவு அல்லது கோதுமை மாவு - 2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
எலுமிச்சை ஜூஸ் - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, கேரட் மூன்றையும் குழைய வேகவிட்டு ஆறியதும் நன்றாக மசித்து கொள்ளவும்.
மசித்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு இத்துடன் பெருங்காயம், உப்பு, தனிமிளகாய்தூள், கொத்துமல்லி, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கலந்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்த பின் அதில் கலந்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை போட்டு 3 நிமிடம் நன்றாக கலந்து ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
கோதுமை மாவு அல்லது மைதா மாவில் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் விட்டு தளர பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி அதனுள்ளே ஒரு வேர்க்கடலை உருண்டையை வைத்து மூடிவிடவும்.
பிறகு மைதா உருண்டையை பிளாஸ்டிக் கவரின் மீது போளியாக தட்டி தவாவில் போட்டு சுற்றி எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
சூப்பரான மசாலா வேர்க்கடலை போளி ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சை வேர்க்கடலை - 200 கிராம்,
உருளைக் கிழங்கு - 2,
கேரட் - 2,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
கொத்துமல்லி - சிறிதளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
மைதா மாவு அல்லது கோதுமை மாவு - 2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
எலுமிச்சை ஜூஸ் - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, கேரட் மூன்றையும் குழைய வேகவிட்டு ஆறியதும் நன்றாக மசித்து கொள்ளவும்.
மசித்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு இத்துடன் பெருங்காயம், உப்பு, தனிமிளகாய்தூள், கொத்துமல்லி, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கலந்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்த பின் அதில் கலந்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை போட்டு 3 நிமிடம் நன்றாக கலந்து ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
கோதுமை மாவு அல்லது மைதா மாவில் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் விட்டு தளர பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி அதனுள்ளே ஒரு வேர்க்கடலை உருண்டையை வைத்து மூடிவிடவும்.
பிறகு மைதா உருண்டையை பிளாஸ்டிக் கவரின் மீது போளியாக தட்டி தவாவில் போட்டு சுற்றி எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
சூப்பரான மசாலா வேர்க்கடலை போளி ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X