search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர டிபன் சேமியா புலாவ்
    X

    மாலை நேர டிபன் சேமியா புலாவ்

    மாலையில் ஏதாவது டிபன் சாப்பிட விருப்புபவர்கள் எளிதாக செய்யக்கூடிய இந்த சேமியா புலாவ் செய்து கொடுக்கலாம். இந்த சேமியா புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 100 கிராம்,
    வெங்காயம், கேரட் - தலா 1,
    பச்சைமிளகாய் - 2,
    பட்டாணி - 50 கிராம்,
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
    வறுத்த முந்திரி, திராட்சை - 30 கிராம்,
    வெண்ணெய்/நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.

    தாளிக்க :

    கடுகு,
    உளுந்து,
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    * சேமியாவை தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் குழையவிடாமல் வேகவைக்கவும். மீதமுள்ள தண்ணீரை வடிகட்டவும்.

    * வெங்காயம், கேரட், கொத்தமல்லி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் நெய் சேர்த்து கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் சிறிது வதங்கியதும் கேரட், பட்டாணி, பச்சைமிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் உப்பு, கரம் மசாலா சேர்த்து கிளறவும்.

    * காய்கறிகள் வெந்தவுடன் கடைசியாக வெந்த சேமியா, கொத்தமல்லி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறவும்.

    * சூப்பரான சேமியா புலாவ் ரெடி.

    * விருப்பப்பட்டால், எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×