என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
காய்ச்சலை குணமாக்கும் மருந்து ரசம்
Byமாலை மலர்24 Oct 2017 3:34 AM GMT (Updated: 24 Oct 2017 3:34 AM GMT)
உடல் வலி, காய்ச்சல் வந்தவர்களுக்கும் ஏற்றது இந்த மருந்து ரசம். இதை செய்வது மிகவும் எளிமையானது. இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கண்டந் திப்பிலி குச்சிகள் - 6 (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்),
பூண்டு - 4 பல்,
புளி - நெல்லியளவு,
துவரம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன்,
மிளகு, சீரகம் - ஒரு டீஸ்பூன்,
மிளகாய் -வற்றல் 2,
சுக்குத்தூள் -ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை- சிறிதளவு,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
கடுகு - கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவைக்கு,
நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை :
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
வெறும் வாணலியில் கண்டந் திப்பிலி, துவரம் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
அதனுடன் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
புளிக்கரைசலுடன் உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
புளியின் பச்சை வாசனை போன பிறகு சுக்குத்தூள், அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
ரசம் நுரைத்து வரும் போது இறக்கவும்.
வாணலியில் நெய் விட்டு கடுகு தாளித்து ரசத்துடன் சேர்க்கவும்.
மேலே சுத்தம் செய்த கொத்தமல்லித்தழை தூவி சூடான சாதத்துடன் பரிமாறவும்.
குறிப்பு : உடல் வலி, காய்ச்சல் வந்தவர்களுக்கும் ஏற்றது. சூப் போலவும் பருகலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கண்டந் திப்பிலி குச்சிகள் - 6 (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்),
பூண்டு - 4 பல்,
புளி - நெல்லியளவு,
துவரம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன்,
மிளகு, சீரகம் - ஒரு டீஸ்பூன்,
மிளகாய் -வற்றல் 2,
சுக்குத்தூள் -ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை- சிறிதளவு,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
கடுகு - கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவைக்கு,
நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை :
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
வெறும் வாணலியில் கண்டந் திப்பிலி, துவரம் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
அதனுடன் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
புளிக்கரைசலுடன் உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
புளியின் பச்சை வாசனை போன பிறகு சுக்குத்தூள், அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
ரசம் நுரைத்து வரும் போது இறக்கவும்.
வாணலியில் நெய் விட்டு கடுகு தாளித்து ரசத்துடன் சேர்க்கவும்.
மேலே சுத்தம் செய்த கொத்தமல்லித்தழை தூவி சூடான சாதத்துடன் பரிமாறவும்.
குறிப்பு : உடல் வலி, காய்ச்சல் வந்தவர்களுக்கும் ஏற்றது. சூப் போலவும் பருகலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X