என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மூட்டுவலிக்கு நிவாரணம் தரும் கண்டந்திப்பிலி ரசம்
Byமாலை மலர்30 Aug 2017 3:31 AM GMT (Updated: 30 Aug 2017 3:31 AM GMT)
கை, கால், உடல் வலி, மூட்டுவலி எல்லாவற்றிருக்கும் நிவாரணம் கிடைக்கும். வாதத்தை போக்கும். இன்று கண்டந்திப்பிலி ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தனியா - ஒரு டீஸ்பூன்,
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
திப்பிலி - 5 குச்சிகள்,
புளி - நெல்லியளவு,
மஞ்சள் தூள் - சிட்டிகை.
உப்பு - தேவைக்கு,
நெய் - அரை டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க.
செய்முறை :
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
வெறும் வாணலியில் தனியா, துவரம் பருப்பு, மிளகாய், மிளகு, சீரகம், திப்பிலி ஆகியவற்றை தனித்தனியாக போட்டு வறுத்து ஆற வைத்து பொடித்து கொள்ளவும்.
புளித்தண்ணீருடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்த பிறகு இறக்கவும்.
மற்றொரு வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன் கலக்கவும்.
சத்தான கண்டந்திப்பிலி ரசம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தனியா - ஒரு டீஸ்பூன்,
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
திப்பிலி - 5 குச்சிகள்,
புளி - நெல்லியளவு,
மஞ்சள் தூள் - சிட்டிகை.
உப்பு - தேவைக்கு,
நெய் - அரை டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க.
செய்முறை :
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
வெறும் வாணலியில் தனியா, துவரம் பருப்பு, மிளகாய், மிளகு, சீரகம், திப்பிலி ஆகியவற்றை தனித்தனியாக போட்டு வறுத்து ஆற வைத்து பொடித்து கொள்ளவும்.
புளித்தண்ணீருடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்த பிறகு இறக்கவும்.
மற்றொரு வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன் கலக்கவும்.
சத்தான கண்டந்திப்பிலி ரசம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X