என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான டிபன் சிவப்பு அவல் உப்புமா
Byமாலை மலர்26 July 2017 5:26 AM GMT (Updated: 26 July 2017 5:26 AM GMT)
சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காலையில் சிவப்பு அவலை வைத்து சத்தான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிவப்பு அவல் - 200 கிராம்,
இளநீர் - 1,
சின்ன வெங்காயம் - 10,
தக்காளி - 1,
இஞ்சி - 1 துண்டு,
மிளகு - 10,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
கடுகு - சிறிது,
நல்லெண்ணெய் - சிறிது,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை சுத்தம் செய்து, இளநீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, மிளகு, சீரகம், இஞ்சி போட்டு தாளித்த பின், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
கடைசியாக இளநீரில் ஊற வைத்த அவலையும், உப்பையும் சேர்த்துப் பிரட்டி, கொத்தமல்லி தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.
சூப்பரான சிவப்பு அவல் உப்புமா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிவப்பு அவல் - 200 கிராம்,
இளநீர் - 1,
சின்ன வெங்காயம் - 10,
தக்காளி - 1,
இஞ்சி - 1 துண்டு,
மிளகு - 10,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
கடுகு - சிறிது,
நல்லெண்ணெய் - சிறிது,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை சுத்தம் செய்து, இளநீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, மிளகு, சீரகம், இஞ்சி போட்டு தாளித்த பின், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
கடைசியாக இளநீரில் ஊற வைத்த அவலையும், உப்பையும் சேர்த்துப் பிரட்டி, கொத்தமல்லி தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.
சூப்பரான சிவப்பு அவல் உப்புமா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X