search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான அரிசிக்கஞ்சி செய்வது எப்படி?
    X

    சத்தான அரிசிக்கஞ்சி செய்வது எப்படி?

    உடல்நலம் சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உடலுக்கு தெம்பு தரக்கூடியது இந்த அரிசிக்கஞ்சி. இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புழுங்கல் அரிசி - 200 கிராம்
    சுக்குப்பொடி - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * வெறும் வாணலியில் புழுங்கல் அரிசியை போட்டு லேசாக வறுத்து, ரவை போல உடைத்துக் கொள்ளவும்.

    * இந்த ரவையை குக்கரில் போட்டு நன்கு டம்ளர் தண்ணீர் விட்டு 5 விசில் வரும் வரை குழைய வேகவிடவும்.

    * பின்னர் அதில் உப்பு, சுக்குப் பொடி சேர்த்து கலந்து பரிமாறவும்.

    * சத்தான அரிசிக்கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×