என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான சத்துமாவு பாசிப்பருப்பு அடை
Byமாலை மலர்27 Jun 2017 5:22 AM GMT (Updated: 27 Jun 2017 5:22 AM GMT)
தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று சத்துமாவு, பாசிப்பருப்பை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு - 1 கப்,
பாசிப்பருப்பு - அரை கப்,
சின்ன வெங்காயம் - கால் கப்,
பூண்டு - 4 பல்,
கொத்துமல்லித் தழை - சிறிதளவு,
தேங்காய் - 1 பத்தை,
மிளகு - 1 ஸ்பூன்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
* சின்ன வெங்காயம், தேங்காய், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கொரகொரப்பாக அரைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன், சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.
* கரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, தேங்காய், கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
* சத்தான சுவையான சத்துமாவு பாசிப்பருப்பு அடை ரெடி.
* அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு - 1 கப்,
பாசிப்பருப்பு - அரை கப்,
சின்ன வெங்காயம் - கால் கப்,
பூண்டு - 4 பல்,
கொத்துமல்லித் தழை - சிறிதளவு,
தேங்காய் - 1 பத்தை,
மிளகு - 1 ஸ்பூன்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
* சின்ன வெங்காயம், தேங்காய், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கொரகொரப்பாக அரைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன், சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.
* கரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, தேங்காய், கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
* சத்தான சுவையான சத்துமாவு பாசிப்பருப்பு அடை ரெடி.
* அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X