என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர சிற்றுண்டி சாமை கொழுக்கட்டை
Byமாலை மலர்26 Jun 2017 3:30 AM GMT (Updated: 26 Jun 2017 3:30 AM GMT)
சாமை அரிசியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இன்று சாமை அரிசியை வைத்து சத்தான சிற்றுண்டி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சாமை அரிசி மாவு - 150 கிராம்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - 2 கொத்து
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
* முந்திரியை சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* தேங்காயை சிறிது துண்களாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் சிறிது நீர் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிடவும்.
* நன்கு கொதித்தவுடன், அதில் சாமை அரிசி மாவைக் கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும். கையால் தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறி வேகவிடவும்.
* இந்தக் கலவையை ஆறவிட்டு கையால் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி சட்டியில் வைத்து ஆவியில் வேகவிடவும்.
* புதினா அல்லது கொத்தமல்லிச் சட்னியுடன் பரிமாறலாம்.
பலன்கள்: நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவு இது. தேங்காயில் இருக்கும் புரோட்டீன், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும். மாலை நேர சிற்றுண்டியாகச் செய்து தரலாம். சட்னி சேர்ப்பதால், அதில் உள்ள சத்துக்களும் அதிகம் கிடைக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாமை அரிசி மாவு - 150 கிராம்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - 2 கொத்து
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
* முந்திரியை சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* தேங்காயை சிறிது துண்களாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் சிறிது நீர் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிடவும்.
* நன்கு கொதித்தவுடன், அதில் சாமை அரிசி மாவைக் கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும். கையால் தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறி வேகவிடவும்.
* இந்தக் கலவையை ஆறவிட்டு கையால் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி சட்டியில் வைத்து ஆவியில் வேகவிடவும்.
* புதினா அல்லது கொத்தமல்லிச் சட்னியுடன் பரிமாறலாம்.
பலன்கள்: நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவு இது. தேங்காயில் இருக்கும் புரோட்டீன், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும். மாலை நேர சிற்றுண்டியாகச் செய்து தரலாம். சட்னி சேர்ப்பதால், அதில் உள்ள சத்துக்களும் அதிகம் கிடைக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X