search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர சிற்றுண்டி சாமை கொழுக்கட்டை
    X

    மாலை நேர சிற்றுண்டி சாமை கொழுக்கட்டை

    சாமை அரிசியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இன்று சாமை அரிசியை வைத்து சத்தான சிற்றுண்டி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி மாவு - 150 கிராம்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
    உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
    கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் - இரண்டு
    கறிவேப்பிலை - 2 கொத்து
    முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    * முந்திரியை சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * தேங்காயை சிறிது துண்களாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * அடுத்து அதில் சிறிது நீர் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிடவும்.

    * நன்கு கொதித்தவுடன், அதில் சாமை அரிசி மாவைக் கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும். கையால் தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறி வேகவிடவும்.

    * இந்தக் கலவையை ஆறவிட்டு கையால் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி சட்டியில் வைத்து ஆவியில் வேகவிடவும்.

    * புதினா அல்லது கொத்தமல்லிச் சட்னியுடன் பரிமாறலாம்.

    பலன்கள்: நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவு இது. தேங்காயில் இருக்கும் புரோட்டீன், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும். மாலை நேர சிற்றுண்டியாகச் செய்து தரலாம். சட்னி சேர்ப்பதால், அதில் உள்ள சத்துக்களும் அதிகம் கிடைக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×