என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தோசைக்கு தொட்டு கொள்ள சத்தான கறிவேப்பிலை பொடி
Byமாலை மலர்6 Jun 2017 5:24 AM GMT (Updated: 6 Jun 2017 5:24 AM GMT)
கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சத்தான கறிவேப்பிலை பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலை - 2 கப்
தனியா தூள் - 2 டீஸ்பூள்
தேங்காய் - 1/2 மூடி
எண்ணெய் - 4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 10
கடலை பருப்பு - 1/2 கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* தேங்காயை துருவிக்கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விடாமல் தேங்காய் துருவலை போட்டு வறுக்கவும். தேங்காய் நன்றாக வாசனை வந்து சிவந்த பதத்துக்கு வருவதற்கு முன்பு எடுத்து விடவும்.
* அடுத்து வெறும் வாணலியில் தனியாவைப் போட்டு வெடிக்கவிட்டு வறுக்கவும். இதுவும் நன்றாக மணம் வரும் வரை சிவக்க வேண்டும்.
* அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை சிவக்க வறுத்து எடுக்கவும்.
* அடுத்து கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு சேர்த்து வறுக்கவும். பருப்புகள் பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்கவும். இதற்குள் கறிவேப்பிலையும் நீர் வற்றி வரும்.
* வறுத்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாகப் பொடிக்கவும்.
* சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி ரெடி.
* கறிவேப்பிலை பொடியில் நல்லெண்ணெய் விட்டு இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
* இதைச் சாதத்தோடு நெய் விட்டு சூடாகக் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கறிவேப்பிலை - 2 கப்
தனியா தூள் - 2 டீஸ்பூள்
தேங்காய் - 1/2 மூடி
எண்ணெய் - 4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 10
கடலை பருப்பு - 1/2 கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* தேங்காயை துருவிக்கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விடாமல் தேங்காய் துருவலை போட்டு வறுக்கவும். தேங்காய் நன்றாக வாசனை வந்து சிவந்த பதத்துக்கு வருவதற்கு முன்பு எடுத்து விடவும்.
* அடுத்து வெறும் வாணலியில் தனியாவைப் போட்டு வெடிக்கவிட்டு வறுக்கவும். இதுவும் நன்றாக மணம் வரும் வரை சிவக்க வேண்டும்.
* அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை சிவக்க வறுத்து எடுக்கவும்.
* அடுத்து கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு சேர்த்து வறுக்கவும். பருப்புகள் பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்கவும். இதற்குள் கறிவேப்பிலையும் நீர் வற்றி வரும்.
* வறுத்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாகப் பொடிக்கவும்.
* சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி ரெடி.
* கறிவேப்பிலை பொடியில் நல்லெண்ணெய் விட்டு இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
* இதைச் சாதத்தோடு நெய் விட்டு சூடாகக் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X