search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தோசைக்கு தொட்டு கொள்ள சத்தான கறிவேப்பிலை பொடி
    X

    தோசைக்கு தொட்டு கொள்ள சத்தான கறிவேப்பிலை பொடி

    கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சத்தான கறிவேப்பிலை பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கறிவேப்பிலை - 2 கப்
    தனியா தூள் - 2 டீஸ்பூள்
    தேங்காய் - 1/2 மூடி
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    மிளகாய் வற்றல் - 10
    கடலை பருப்பு - 1/2 கப்
    உளுந்தம் பருப்பு - 1/4 கப்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் விடாமல் தேங்காய் துருவலை போட்டு வறுக்கவும். தேங்காய் நன்றாக வாசனை வந்து சிவந்த பதத்துக்கு வருவதற்கு முன்பு எடுத்து விடவும்.

    * அடுத்து வெறும் வாணலியில் தனியாவைப் போட்டு வெடிக்கவிட்டு வறுக்கவும். இதுவும் நன்றாக மணம் வரும் வரை சிவக்க வேண்டும்.

    * அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை சிவக்க வறுத்து எடுக்கவும்.

    * அடுத்து கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு சேர்த்து வறுக்கவும். பருப்புகள் பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்கவும். இதற்குள் கறிவேப்பிலையும் நீர் வற்றி வரும்.

    * வறுத்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாகப் பொடிக்கவும்.

    * சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி ரெடி.

    * கறிவேப்பிலை பொடியில் நல்லெண்ணெய் விட்டு இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

    * இதைச் சாதத்தோடு நெய் விட்டு சூடாகக் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×