search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கைகள், தோள்பட்டையை வலுவாக்கும் லோலாசனம்
    X

    கைகள், தோள்பட்டையை வலுவாக்கும் லோலாசனம்

    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைகள், மணிக்கட்டுகள், தோள்பட்டைகள் வலுப்பெறும். இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை :

    விரிப்பில் பத்மாசனத்தில் அமர்ந்து தொடைகளை ஒட்டியவாறு உள்ளங்கைகளை தரையில் பதிக்கவும். ஆழமாக மூச்சை இழுத்து கைகளின் பலத்தால் உடலை மேலே தூக்கவும். இந்நிலையில் மூச்சை நிறுத்தி ஒரு சில விநாடிகள் இருக்கவும். மூச்சை வெளிவிட்டு பத்மாசனத்திற்கு வரவும்.

    இவ்வாறு 5 முதல் 7 முறை செய்யலாம்.

    பலன்கள் :

    கைகள், மணிக்கட்டுகள், தோள்பட்டைகள் வலுப்பெறும்.

    வயிற்றுத் தசைகள் மேம்பாடு அடைகின்றன.

    உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது.

    கை,கால்களிருக்கும் வேண்டாத தசைகளைக் குறைக்கிறது.
    Next Story
    ×