search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    டெங்கு காய்ச்சல்: குழந்தைகளின் பாதுகாப்புக்கு...
    X

    டெங்கு காய்ச்சல்: குழந்தைகளின் பாதுகாப்புக்கு...

    டெங்குக் காய்ச்சலிலிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
    குழந்தைகள், விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தில் உடலைக் காத்துக்கொள்வதில் கவனமாக இருக்க மாட்டார்கள். அதனால், பெற்றோரே முழு கவனத்துடன் இருக்க வேண்டும். டெங்குக் காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.

    கொசுக்கடியிலிருந்து குழந்தைகளைக் காப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். கால்கள், கைகள் ஆகியவற்றை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவிக்க வேண்டும். குழந்தைகள் விளையாட வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, கொசுக் கடிக்காமல் இருக்க, திரவங்களைப் பூசி அனுப்பவும் (திரவங்கள் உயர்தரமானதாக இருக்க வேண்டும்) 

    குழந்தைகள் தேங்கிய நீரின் அருகே செல்வதைத் தவிர்க்க வைக்கவும். 

    குழந்தைகள் அதிக அளவில் நீர் குடிக்க வைக்கவும். (எப்போதும் வெந்நீரை மட்டுமே குடிக்கச் செய்யவும்) 

    இவை தவிர, வீட்டைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நீர் தேங்கும் விதத்தில் பொருள்களை வைக்காதீர்கள். 

    காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட குழந்தைகளுக்கு... 

    குழந்தைகளின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் விதத்தில், உணவுகளைக் கொடுக்க வேண்டும். இளநீர் குடிக்கச் செய்யலாம். கடைகளில் விற்கப்படும் ஓ.ஆர்.எஸ் கரைசலைக் கொடுக்கலாம். வீட்டில் தயாரித்த தயிர் மற்றும் மோரில் உப்பு சேர்த்து கொடுக்கலாம். வெந்நீர் குடிப்பதைவிடவும் இவை நல்லது. குளிர்ச்சியான உணவு வகைகளைத் தவிர்க்கவும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக் குறைக்கக்கூடாது. 

    குழந்தைகள் ஒருநாளில் வழக்கமாக 5 அல்லது 6 முறை சிறுநீர் கழிப்பார்கள். அது தொடர வேண்டும். சிறுநீர் நிறத்தைக் கவனித்து மருத்துவரிடம் கூற வேண்டும். 
    Next Story
    ×