search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டபோது எடுத்த படம்.
    X
    திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டபோது எடுத்த படம்.

    திருவானைக்காவல் கோவிலுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சீர்வரிசை

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சீர்வரிசை வழங்கப்பட்டது.
    சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு தங்கை என்ற முறையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் கோவில் சீர்வரிசைசமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. இதே போல் அகிலாண்டேஸ்வரியும் ரெங்கநாதரின் மற்றொரு தங்கையாக கருதப்பட்டு, அக்கோவிலில் மார்கழி முதல்நாள் நடைபெறும் திருப்பாவாடைக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கியதற்கான சான்றுகள் சில ஆண்டுகளுக்கு முன் கிடைக்கப்பெற்றன.

    அதன் அடிப்படையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நின்று போன இவ்வழக்கத்தை புதுப்பித்து நடைமுறைக்குக் கொண்டுவர இரு கோவில் நிர்வாகங்களும் முடிவு செய்தன. இதையடுத்து இன்று (16-ந்தேதி) மார்கழி மாதம் பிறக்கிறது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாலைகள், தாம்பூலம், மங்கல பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், கண்காணிப்பாளர் கிருஷ்ணன், அலுவலர்கள், ஊழியர்கள் திருவானைக்காவல் கோவிலுக்கு நேற்று மாலை எடுத்து வந்தனர்.

    திருவானைக்கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா மற்றும் கோவில் பண்டிதர்கள் கோவில் கொடிமரம் முன் வைத்து சீர்வரிசை பொருட் களை பெற்றுக்கொண்டனர். இதில் உள்ள உணவுப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நிவேதனத்துடன் இன்று (சனிக்கிழமை) காலை பூஜைகள் நடைபெறும். முதல் பூஜையின்போது சுவாமி மற்றும் அம்பாளுக்கு ரெங்கநாதர்கோவில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு பதினாறு வகை உபசாரங்களுடன் மகாதீபாராதனை நடைபெறும். சீர்வரிசை பொருட்கள் கொடுக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×