என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வெள்ளிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
Byமாலை மலர்16 Oct 2017 5:37 AM GMT (Updated: 16 Oct 2017 5:37 AM GMT)
வெள்ளிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது.
வெள்ளிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாளில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதிஹோமம், 5.30 மணிக்கு கிரிவலம், காலை 6.50 மணிக்கு காப்புக்கட்டு, தொடர்ந்து அகண்ட நாமஜெபம், மதியம் 1 மணிக்கு தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.
21-ந் தேதி காலையில் கிரிவலம், பஜனை, மதியம் அபிஷேகம், கந்தபுராண தொடர் விரிவுரை, மாலையில் தீபாராதனை கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
22-ந் தேதி அதிகாலையில் திருவிழா சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடக்கிறது.
23-ந் தேதி காலையில் சிறப்பு பூஜைகளும், மாலை 6 மணிக்கு சமய மாநாடும், தொடர்ந்து சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
24-ந் தேதி முற்பகல் 11.30 மணிக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடக்கிறது. நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நலஉதவிகளை வழங்கி பேசுகிறார்.
விழாவின் இறுதி நாளான 25-ந் தேதி காலையில் கிரிவலம், தீபாராதனை, பஜனை போன்றவை நடைபெறும். மாலை 4 மணிக்கு சாமி, சூரசம்ஹாரத்திற்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளலும், 6.15 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8.30 மணிக்கு சாமி மயில் வாகனத்தில் உலா வருதல் போன்றவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை வெள்ளிமலை கோவில் முன்னேற்ற சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.
21-ந் தேதி காலையில் கிரிவலம், பஜனை, மதியம் அபிஷேகம், கந்தபுராண தொடர் விரிவுரை, மாலையில் தீபாராதனை கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
22-ந் தேதி அதிகாலையில் திருவிழா சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடக்கிறது.
23-ந் தேதி காலையில் சிறப்பு பூஜைகளும், மாலை 6 மணிக்கு சமய மாநாடும், தொடர்ந்து சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
24-ந் தேதி முற்பகல் 11.30 மணிக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடக்கிறது. நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நலஉதவிகளை வழங்கி பேசுகிறார்.
விழாவின் இறுதி நாளான 25-ந் தேதி காலையில் கிரிவலம், தீபாராதனை, பஜனை போன்றவை நடைபெறும். மாலை 4 மணிக்கு சாமி, சூரசம்ஹாரத்திற்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளலும், 6.15 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8.30 மணிக்கு சாமி மயில் வாகனத்தில் உலா வருதல் போன்றவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை வெள்ளிமலை கோவில் முன்னேற்ற சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X