search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெள்ளிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
    X

    வெள்ளிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா

    வெள்ளிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது.
    வெள்ளிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாளில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதிஹோமம், 5.30 மணிக்கு கிரிவலம், காலை 6.50 மணிக்கு காப்புக்கட்டு, தொடர்ந்து அகண்ட நாமஜெபம், மதியம் 1 மணிக்கு தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    21-ந் தேதி காலையில் கிரிவலம், பஜனை, மதியம் அபிஷேகம், கந்தபுராண தொடர் விரிவுரை, மாலையில் தீபாராதனை கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    22-ந் தேதி அதிகாலையில் திருவிழா சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடக்கிறது.

    23-ந் தேதி காலையில் சிறப்பு பூஜைகளும், மாலை 6 மணிக்கு சமய மாநாடும், தொடர்ந்து சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    24-ந் தேதி முற்பகல் 11.30 மணிக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடக்கிறது. நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நலஉதவிகளை வழங்கி பேசுகிறார்.

    விழாவின் இறுதி நாளான 25-ந் தேதி காலையில் கிரிவலம், தீபாராதனை, பஜனை போன்றவை நடைபெறும். மாலை 4 மணிக்கு சாமி, சூரசம்ஹாரத்திற்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளலும், 6.15 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8.30 மணிக்கு சாமி மயில் வாகனத்தில் உலா வருதல் போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை வெள்ளிமலை கோவில் முன்னேற்ற சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×