search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அழகிரிநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
    X

    அழகிரிநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

    கொண்டலாம்பட்டி அடுத்துள்ள உத்தமசோழபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி சாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
    கொண்டலாம்பட்டி அடுத்துள்ள உத்தமசோழபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி சாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்மகர்த்தா செல்வம், ஏகாதசி நண்பர்கள் குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து இருந்தனர். இதில் கொண்டலாம்பட்டி, உத்தமசோழபுரம், அரியானூர், ஆட்டையாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×