என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மூலவர், உற்சவ மூர்த்திக்கு அணிவிக்க ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் திருமலைக்கு வந்தன
Byமாலை மலர்27 Sep 2017 4:32 AM GMT (Updated: 27 Sep 2017 4:32 AM GMT)
பிரம்மோற்சவ விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் பாதுகாப்பாக திருமலைக்கு வந்தன. அந்த மாலைகள் மூலவர், உற்சவ மூர்த்திக்கு இன்று அணிவிக்கப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் ‘சிகர’ நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை) இரவு 7.30 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடக்கிறது.
அதனை முன்னிட்டு நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள், பட்டு வஸ்திரம், கிளிகள் ஆகியவை வாகனங்களில் பலத்த பாதுகாப்போடு திருமலைக்கு கொண்டு வரப்பட்டன. அந்த மாலைகள், பட்டு வஸ்திரம், கிளிகள் ஆகியவற்றை கூடைகளில் வைத்து திருமலையில் உள்ள ஜீயர் மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வைத்து சிறப்புப்பூஜை செய்யப்பட்டது.
பின்னர் ஜீயர் மடத்தில் இருந்து மாலைகள், பட்டு வஸ்திரம், கிளிகள் திருமலையில் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏழுமலையான் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டன.
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளில் ஒன்று, இன்று (புதன்கிழமை) மூலவருக்கு அணிவிக்கப்படுகிறது. மற்றொரு மாலை, பட்டு வஸ்திரம், கிளிகள் கருடசேவையின்போது கருட வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படுகிறது. அத்துடன் ஏழுமலையான் கோவிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டி எனப்படும் லட்சுமி ஆரமும் அணிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனை முன்னிட்டு நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள், பட்டு வஸ்திரம், கிளிகள் ஆகியவை வாகனங்களில் பலத்த பாதுகாப்போடு திருமலைக்கு கொண்டு வரப்பட்டன. அந்த மாலைகள், பட்டு வஸ்திரம், கிளிகள் ஆகியவற்றை கூடைகளில் வைத்து திருமலையில் உள்ள ஜீயர் மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வைத்து சிறப்புப்பூஜை செய்யப்பட்டது.
பின்னர் ஜீயர் மடத்தில் இருந்து மாலைகள், பட்டு வஸ்திரம், கிளிகள் திருமலையில் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏழுமலையான் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டன.
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளில் ஒன்று, இன்று (புதன்கிழமை) மூலவருக்கு அணிவிக்கப்படுகிறது. மற்றொரு மாலை, பட்டு வஸ்திரம், கிளிகள் கருடசேவையின்போது கருட வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படுகிறது. அத்துடன் ஏழுமலையான் கோவிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டி எனப்படும் லட்சுமி ஆரமும் அணிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X