search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆவணி தபசு திருவிழா கொடியேற்றத்துக்கு பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது எடுத்த படம்.
    X
    ஆவணி தபசு திருவிழா கொடியேற்றத்துக்கு பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது எடுத்த படம்.

    பால்வண்ணநாதர் சுவாமி கோவிலில் ஆவணி தபசு திருவிழா கொடியேற்றம்

    கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி கோவிலில் ஆவணி தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் பிரசித்தி பெற்ற பால்வண்ணநாதர்- ஒப்பனையம்மாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி தபசு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த திருவிழா தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

    அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை 8.20 மணிக்கு அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 11-ம் திருநாளான வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான தபசு திருவிழா 13-ம் திருநாளான 1-ந் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு சுவாமி முகலிங்கநாதராகவும், இரவு 12 மணிக்கு பால்வண்ணநாதராகவும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×