search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூய மாசற்ற இருதய அன்னை ஆலய தங்க தேர் திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    தூய மாசற்ற இருதய அன்னை ஆலய தங்க தேர் திருவிழா இன்று தொடங்குகிறது

    கேசவன்புத்தன்துறை தூய மாசற்ற இருதய அன்னை ஆலய தங்க தேர் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    கேசவன் புத்தன்துறை தூய மாசற்ற இருதய அன்னை ஆலய தங்க தேர் திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6 மணிக்கு சிறப்பு கொடி அர்ச்சிப்பு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆலய அர்ச்சிப்பு, திருக்கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடக்கிறது. விழாவில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமைதாங்கி மறையுரையாற்றுகிறார்.

    நாளை (சனிக்கிழமை) மாலை ஆயர் இல்ல அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமையில் இனயம்புத்தன்துறை அருட்பணியாளர் பிரைட் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு மறையுரை நடைபெறுகிறது.

    வருகிற 25-ந்தேதி மாலை 5 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் புனித ஜோண்ஸ் கல்லூரி அருட்பணியாளர் ஜான்போஸ்கோ தலைமையில், அருட்பணியாளர்கள் ஆஷ்லி, இஞ்ஞாசி, சைமன் ஆகியோர் மறையுரையாற்றுகிறார்கள்.

    27-ந்தேதி காலை 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடக்கிறது. மண்டல குருக்கள் ஜெபிக்கின்றனர். அதைத்தொடர்ந்து தங்க தேர் பவனி நடைபெறுகிறது.

    28-ந்தேதி காலையில் சிறப்பு திருப்பலியில் ஆயர் இல்ல அருட்பணியாளர் ஸ்டீபன் தலைமையில், காரவிளை அருட்பணியாளர் ஆன்றோ மறையுரையாற்றுகிறார். நிகழ்ச்சியை பங்கு மக்கள், கடல் தொழில் செய்வோர் சிறப்பிக்கின்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை சாம் எப். மேத்யூ, பங்குமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்துவருகிறார்கள்.
    Next Story
    ×