என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இட்லி
Byமாலை மலர்8 Oct 2017 8:15 AM GMT (Updated: 8 Oct 2017 8:15 AM GMT)
அப்பு மூவிஸ் சார்பில் அப்பாஸ் தூயவன் தயாரித்துள்ள படம் ‘இட்லி’. இதில் சரண்யா, கோவை சரளா , கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அப்பு மூவிஸ் சார்பில் அப்பாஸ் தூயவன் தயாரித்துள்ள படம் ‘இட்லி’. இதில் சரண்யா, கோவை சரளா , கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு மனோபாலா, தேவதர்ஷினி , வெண்ணிறஆடை மூர்த்தி இமான் அண்ணாச்சி, டெல்லி கணேஷ், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். ‘இட்லி’ படத்தை எழுதி இயக்கி இருப்பவர் வித்யாதரன்.
“நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் இந்தகாலத்துக்கு தேவையான மெசேஜ் உள்ளது. திட்டமிட்டப்படி 29 நாட்களில் படபிடிப்பை முடித்தோம். வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான கதையை எழுதி இயக்க வேண்டும் அது கமர்ஷியலாகவும் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அப்படி யோசிக்கும் போது தான் இப்படத்தின் கதை என் மனதில் தோன்றியது.
வயதான மூன்று பாட்டிகள் தான் ஹீரோ. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் கதை. படத்தில் பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள் என்று எதுவும் கிடையாது. இது இட்லி படத்தின் ஸ்பெஷல். அனைவரையும் சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும் படமாக இருக்கும். நான் கதையை சரண்யாவிடம் முதலில் கூறிய போது சந்தேகத்தோடு கேட்டார். நடித்து முடித்து காட்சியை பார்த்த போது அனைவருக்கும் மனநிறைவாக இருந்தது.” என்றார்.
இந்த படத்தின் டீசரை கார்த்தி வெளியிட்டார். ‘இட்லி’ விரைவில் திரைக்கு வருகிறது.
“நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் இந்தகாலத்துக்கு தேவையான மெசேஜ் உள்ளது. திட்டமிட்டப்படி 29 நாட்களில் படபிடிப்பை முடித்தோம். வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான கதையை எழுதி இயக்க வேண்டும் அது கமர்ஷியலாகவும் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அப்படி யோசிக்கும் போது தான் இப்படத்தின் கதை என் மனதில் தோன்றியது.
வயதான மூன்று பாட்டிகள் தான் ஹீரோ. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் கதை. படத்தில் பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள் என்று எதுவும் கிடையாது. இது இட்லி படத்தின் ஸ்பெஷல். அனைவரையும் சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும் படமாக இருக்கும். நான் கதையை சரண்யாவிடம் முதலில் கூறிய போது சந்தேகத்தோடு கேட்டார். நடித்து முடித்து காட்சியை பார்த்த போது அனைவருக்கும் மனநிறைவாக இருந்தது.” என்றார்.
இந்த படத்தின் டீசரை கார்த்தி வெளியிட்டார். ‘இட்லி’ விரைவில் திரைக்கு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X