search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Sangam"

    • தமிழ்சங்க நிறுவனர் மன்னர் மன்னன் 96-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
    • நாடக வியலாளர் பேராசிரியர் பார்த்திபராஜா சாமீ என்ற நூலை வெளியிட்டு பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ் சங்கத்தில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாள் மற்றும் தமிழ்சங்க நிறுவனர் மன்னர் மன்னன் 96-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு தமிழ் சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார்.

    விழாவில் நாடக வியலாளர் பேராசிரியர் பார்த்திபராஜா சாமீ என்ற நூலை வெளியிட்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்க செயலாளர் சீனு.மோகன்தாசு, பொருளர் அருள்செல்வம், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, கோ.பாரதி, எம்.எஸ்.ராஜா, கலியபெருமாள், மண்ணாங்கட்டி, சரஸ்வதி வைத்தியநாதன், ராஜஸ்ரீமகேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பல்வேறு நாடுகளில் உலக தமிழ் சங்கம் மூலமாக தமிழுக்கு தொண்டு செய்யும் வகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவி வருகிறோம்.
    • திருவள்ளுவரின் பெருமையை தமிழ் சங்கம் உலகம் முழுவதும் பரப்பி கொண்டு இருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம் எதிரே உள்ள மாநில தமிழ் சங்க வளாகத்தில் வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் தொடக்கமாக இள முனைவர் திருக்குறள் கி.பிரபா இறை வேண்டல் பாடினார். இசை தென்றல் அருணா சிவாசி திருவள்ளுவர் வாழ்த்து கூறினார். மாநில தமிழ் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பால் வளன் அரசு வரவேற்றார். மேயர் சரவணன் வாழ்த்தி பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம் கலந்து கொண்டு 6 அடி உயரத்திலான திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் உலகை தமிழால் உயர்த்திடுவோம்... யாதும் ஊரே யாவரும் கேளிர்... என தனது பேச்சை தொடங்கினார்.

    நான் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள அழகப்பபுரத்தில் பிறந்தவன். எனது தாயார் சந்தனத்தாய் நினைவாக எங்களது சங்கத்தின் சார்பில் உலகின் பல்வேறு நாடுகளிலும் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளோம். அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உலக தமிழ் சங்கம் மூலமாக தமிழுக்கு தொண்டு செய்யும் வகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவி வருகிறோம்.

    திருவள்ளுவரை உலகறிய செய்வதோடு, உலகம் முழுவதும் வாழும் தமிழ் குடும்பங்களின் அடுத்த தலைமுறையினர் தமிழின் சிறப்பை உணர்ந்து போற்றவே இந்த முயற்சி. அவரது புகழை தமிழர்கள் கொண்டாட வேண்டும்.

    தற்போது பாளையங்கோட்டையில் 158-வது திருவள்ளுவர் சிலையை வழங்கி திறந்து வைத்துள்ளேன். திருவள்ளுவரின் பெருமையை தமிழ் சங்கம் உலகம் முழுவதும் பரப்பி கொண்டு இருக்கிறது. 133 அதிகாரங்களில் 1,330 குறள்களில் ஒன்றே முக்கால் அடியிலே திருவள்ளுவர் உலகத்தை அளந்தார். உலகமெல்லாம் உயர்ந்தார். உலகில் உள்ள மக்கள் எல்லோரும் நமது மக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் நல்லாசிரியர் ஜான் பீட்டர் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளர் திவான், ராமசாமி, பாண்டியன், கிருபாகரன், வக்கீல் சுதர்சன், பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை தமிழ்ச் சங்கத்தில் பாரதி விழா நடைபெற்றது.
    • விழாவில் வைத்திலிங்கம் எம்.பி. விருதுகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ்ச் சங்கத்தில் பாரதி விழா நடைபெற்றது. விழாவிற்க்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார்.விழாவில் வைத்திலிங்கம் எம்.பி. விருதுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அரிமளம்.பத்மநாபன், தமிழ்ச் சங்கச் செயலர் சீனு.மோகன்தாசு,துணைத் தலைவர்ஆதிகேசவன், பொருளாளர் திருநாவு க்கரசு, துணைத்தலைவர் பாலசுப்ரமணியன், துணை ச்செயலர் அருள்செல்வம் மற்றும் விருதாளர்கள் தந்தை பிரியன், சம்பத், ராஜா கண்ணு, சுமித்ரா, பிரபா, சரவணன் மற்றும் கவிஞர்கள்,பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழா எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாக அரங்கில் நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்க செயலாளர் சீனு.மோகன்தாசு, பொருளாளர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் துணைச் செயலர் மு.அருள் செல்வம் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழா எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாக அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தமிழருவி மணியன், நாகராசன், துணைவேந்தர் முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் பொன்னுசாமி ஆகியோர் பங்கேற்ற விழாவில் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    மேலும் தமிழ் சார்ந்த கலை நிகழ்ச்சிகளுடன், தமிழ் இசை பாடல்களுடன் விழா நடைபெற்றது. இவ்விழாவில் இலக்கியம், இலக்கணம், மொழிபெயர்ப்பு,சமூக நீதி, இதழ், பைந்தமிழ், தொல்காப்பியர் விருது என பல்வேறு துறையில் சிறப்பாக செயல்பட்டு பணியாற்றி வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

    அதுபோல் புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருதினை புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்துவுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்க செயலாளர் சீனு.மோகன்தாசு, பொருளாளர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் துணைச் செயலர் மு.அருள் செல்வம் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

    முடிவில் பாரிவேந்தர் பைந்தமிழ் விருது பெற்ற கவிஞர் சிற்பி.பாலசுப்பிரமணியன் ஏற்புரை நிகழ்த்தினார்.

    • புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞரேறு வாணிதாசனார் விழா, மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தமிழ் சங்க விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது.
    • மங்கலம் அரசு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞரேறு வாணிதாசனார் விழா, மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தமிழ் சங்க விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது.

    விழாவிற்கு தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ஆதிகேசவன், பாலசுப்பிரமணியன், திருநாவுக்கரசு, துணை செயலாளர் அருள்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீனு, மோகன்தாசு வரவேற்றார். 'கவிஞரேறு வாணிதாசரின் பன்முக பங்கு' என்ற தலைப்பில் கவியரங்கமும், 'கெஞ்சி வாழ்தல் நஞ்சினும் கொடியது' என்ற தலைப்பில் உரையரங்கமும் நடந்தது. தொடர்ந்து மங்கலம் அரசு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் பலருக்கு அவர்களது சேவைகளை பாராட்டி தமிழ்ச் சங்க விருது வழங்கப்பட்டது.

    விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், தமிழறிஞர்கள், கவிஞர் வாணிதாசனின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    ×