என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President poll"

    • பெரும்பான்மைக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.
    • எதிர்க்கட்சி தலைவர் பேட்ரிக் ஹெர்மினி 52.70 சதவீத வாக்குகள் பெற்று அதிபரானார்.

    விக்டோரியா:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான சீசெல்சில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

    இந்தத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் அதிகபட்சமாக அதிபர் வேவல் ராம்கலவன் 46.4 சதவீத வாக்குகளையும், எதிர்க்கட்சி தலைவரான பேட்ரிக் ஹெர்மினி 48.8 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஆனால் பெரும்பான்மைக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.

    இந்நிலையில், இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி சார்பில் அதிபர் வேவல் ராம் கலவனும், பிரதான எதிர்க்கட்சியான ஹெர்மினி ஐக்கிய செஷெல்ஸ் சார்பில் பேட்ரிக் ஹெர்மினியும் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் எதிர்க்கட்சி தலைவர் பேட்ரிக் ஹெர்மினி 52.70 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

    அதிபராக தேர்வு செய்யப்பட்ட பேட்ரிக் ஹெர்மனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.
    • முன்னாள் அதிபரான அவருக்கு கட்சியினரிடம் அதிக ஆதரவு உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டிரம்ப் களம் இறங்கியுள்ளார். அவருக்கு கட்சியினரிடம் அதிக ஆதரவு உள்ளது.

    அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட உள்ளார். அவரும் டிரம்ப் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது

    இந்நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது கமலா ஹாரிஸ் கூறியதாவது:

    டொனால்டு டிரம்ப் அதிபராக மீண்டும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்குத் திரும்புவார் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. இதனால்தான் நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரசாரம் செய்கிறேன்.

    டிரம்ப் அதிபராவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும். இது அமெரிக்காவுக்கு நல்லதல்ல. நாம் பயப்படும்போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும். ஜனநாயக கட்சியினரை மீண்டும் போராட அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தார்.

    • அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.
    • ஜனவரியில் பதவியேற்கும் டிரம்ப் அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.

    புதுடெல்லி:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனவரியில் பதவியேற்கும் டிரம்ப் அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.

    அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக எக்ஸ் வலைதளம் வாயிலாக அறிவித்துள்ளார். இந்த முதலீடு அமெரிக்காவின் எனர்ஜி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, கவுதம் அதானி வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றதற்கு வாழ்த்துகள். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டாண்மை வலுவடைந்து வரும் வேளையில், அதானி குழுமம் தனது உலகளாவிய வர்த்தக நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 15,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

    ×