என் மலர்
நீங்கள் தேடியது "பாலியல் வன்கொடுமை"
- அந்தச் சிறுமி தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்று டிரம்ப்-ஐ கடித்தபோது, அவர் அந்தச் சிறுமியைத் தாக்கினார்.
- பிறந்த சிசு கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதை டிரம்ப் நேரில் பார்த்தார்.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன்.
கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவின்படி லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்த திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆவணங்களின்படி, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நியூஜெர்சியில் வைத்து 13 வயது சிறுமியை டிரம்ப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
அந்தச் சிறுமி தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்று டிரம்ப்-ஐ கடித்தபோது, அவர் அந்தச் சிறுமியைத் தாக்கியதாகவும், அதே சிறுமியை ஜெப்ரி எப்ஸ்டீனும் வன்கொடுமை செய்ததாகவும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், 1984-ஆம் ஆண்டு மிச்சிகனில் உள்ள மோனா ஏரியில், பிறந்த குழந்தை சிசுக்ககொலை செய்யப்பட்டு வீசப்பட்டதை டிரம்ப் அங்கிருந்து நேரில் பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட குழந்தை டிரம்ப் அல்லது பிறரின் பாலியல் உறவினால் உருவான குழந்தையாக இருக்கக்கூடும் என்றும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதிபர் டிரம்ப், எப்ஸ்டீனுடனான தனது பழைய தொடர்புகள் மற்றும் இந்த அனைத்துப் புகார்களையும் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
- அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன.
- பிரதமர் மோடியின் 2017 ஜூலை மாத இஸ்ரேல் பயணம் உண்மை.
அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2019 இல் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன்.
இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை நேற்று லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்கள், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது.
அதில் அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, நியூ யார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோயால் பில் கேட்ஸ் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார் என புதிய கோப்புகளில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு
அதேநேரம் தற்போது வெளியிடப்பட்டுள்ள எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பில் இடம்பெற்றுள்ள எப்ஸ்டீனின் மின்னஞ்சல் ஒன்றில், பிரதமர் மோடியின் பெயர் மற்றும் அவர் 2017 இல் மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் "அந்த மின்னஞ்சலில் பிரதமர் மோடியின் 2017 ஜூலை மாத இஸ்ரேல் பயணம் குறித்த உண்மைத் தகவலைத் தவிர, மற்ற அனைத்தும் ஒரு குற்றவாளியின் தரம் குறைந்த கற்பனைகளே.
இதற்கு எள்ளளவும் முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை; இதை மிகுந்த அருவருப்புடன் நிராகரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- மூவருக்கு வரும் 11-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆண் பெண் இருபாலரும் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் உள்ள உணவகத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த 56 வயது நபரான குணசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இதே உணவகத்தில் வேலை செய்த 22 வயது பெண்ணை குணசேகர் கல்லூரி வளாகத்திலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் 5 பேரும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் அழுது கொண்டே கல்லூரியில் உள்ள காவலாளியிடம் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து உடனடியாக சைதாப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, குணசேகரன் கைது செய்யப்பட்டார். உணவக உரிமையாளரான அரசியல் பிரமுகர் கோட்டூர் செல்வம், நண்பர் கார்த்திக் ஆகியோரும் இந்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த கேண்டீன் உரிமையாளர் முத்து செல்வம், அவரது நண்பர் கார்த்திகேயன், மாஸ்டஸ் குணசேகர் ஆகிய மூவருக்கு வரும் 11-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சி.
- எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.
தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் உள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியும் அவர் மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், நந்தனத்தில் அரசுக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. இச்சம்பவங்கள், கடும் கண்டனத்திற்கு உரியவை.
தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பிழைப்புக்காகத் தமிழ்நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலைத்தான் இந்தக் கபட நாடகத் திமுக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது.
கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பதிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் இந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால்தான் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய அரசு, மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதால், கொடுங்குற்றங்களில் ஈடுபடச் சமூக விரோதக் கும்பல்களுக்குத் துணிச்சல் வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், முதல்வர் அவர்கள் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்றும், எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.
ஆட்சியின் இறுதிக் கால நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் முதல்வர் அவர்கள், இனி இருக்கும் கொஞ்சம் நாள்களிலாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு எதிரான, மக்களுக்குக் கொஞ்சமும் பாதுகாப்பே இல்லாத, இந்த வெற்று விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உணவகத்தில் வேலை செய்த 22 வயது பெண்ணை கல்லூரி வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- பாலியல் வன்கொடுமை செய்த மற்ற நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை:
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆண், பெண் இருபாலரும் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் உள்ள உணவகத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த 56 வயது நபரான குணசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இதே உணவகத்தில் வேலை செய்த 22 வயது பெண்ணை குணசேகர் கல்லூரி வளாகத்திலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் 5 பேரும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் அழுதுகொண்டே கல்லூரியில் உள்ள காவலாளியிடம் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து உடனடியாக சைதாப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, குணசேகர் கைது செய்யப்பட்டார். உணவக உரிமையாளரான அரசியல் பிரமுகர் செல்வம், டீ மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே மாணவி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதேபோன்று நந்தனம் அரசு கலைக் கல்லூரியிலும் இளம்பெண் கல்லூரி வளாகத்தில் வைத்தே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வரும் நிலையில் இளம்பெண் வேறு யாருக்கும் இவர்களால் விருந்தாக்கப்பட்டாரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நந்தனம் கலைக்கல்லூரியில் இளம்பெண் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று மாணவர் அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சென்னையில் கல்விக் கூடங்களில் இதுபோன்று பாலியல் அத்துமீறல் நடைபெறுவது தொடர் கதையாகி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இது போன்ற பாலியல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்தப் போராட்டம் காரணமாக நந்தனம் கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் பிரபலமான நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் அரங்கேறி இருக்கும் இந்த பாலியல் சம்பவம் கல்வியாளர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- கார் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
- மக்கள் காரை நெருங்குவதைக் கண்ட இளைஞர்கள், மாணவியை ஓடும் காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
12 ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு ஓடும் காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி காலை அந்த மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த இரு இளைஞர்கள் அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட மாணவியை ஓடும் காரிலேயே பல மணி நேரம் அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கார் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் காரை வழிமறித்துச் சோதனையிட முயன்றனர்.
மக்கள் காரை நெருங்குவதைக் கண்ட இளைஞர்கள், மாணவியை ஓடும் காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
கிராம மக்கள் அந்த மாணவியை மீட்டு அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர்.
குடும்பத்தினர் கடந்த 11 ஆம் தேதி பிகானேர் போலீசில் புகார் அளித்ததன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இரு இளைஞர்களைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- வயல்வெளியில் சிறுமி சடலமாகக் கிடப்பதை கிராம மக்கள் கண்டனர்.
- அவர் சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கரில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் சோன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, கடந்த டிசம்பர் 31-ம் தேதி முதல் காணாமல் போயிருந்தார்.
சிறுமியைத் தேடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று அருகிலுள்ள கோஸ்ரா கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் சிறுமி சடலமாகக் கிடப்பதை கிராம மக்கள் கண்டனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், பின்னர் ஆதாரங்களை மறைக்க கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகச் 24 வயது இளைஞரை போலிசார் கைது செய்துள்ளனர். அவர் சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 13-15 வயதுடைய மூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
- வீடியோ எடுத்து, அதை வைத்து சிறுமியை மிரட்டினர்.
கர்நாடகாவின் ஹூப்ளியில் 13 வயது சிறுமியை 3 சிறுவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஹூப்ளி-தார்வாட் போலீசார் வழக்குப் பதிவு செய்து 13-15 வயதுடைய மூன்று சிறுவர்களையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
இவர்கள் சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் சிறுமியை அணுகி, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று இந்த ஈடுபட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதை வீடியோ எடுத்து, அதை வைத்து சிறுமியை மிரட்டியதாக சிறுமியின் பெற்றோர் புகாரில் தெரிவித்தனர். இதனால் சிறுரவர்களின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதால், அவர்கள் சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
- பெண் தனியாக இருப்பதை அறிந்த சுக்ராம் பிரஜாபதி, கதவை உள்பக்கமாகப் பூட்டியுள்ளார்.
- உயிரிழந்த சுக்ராமின் மனைவியின் புகாரின் பேரில், காவல்துறையினர் இளம்பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்யமுயன்ற நபரை இளம்பெண் ஒருவர் கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மாநிலம் பண்டா மாவட்டத்தில் தந்தையை இழந்த 18 வயது இளம்பெண் தனது தாயுடன் வசித்து வந்தார்.
ஜனவரி 1 ஆம் தேதி தாய் வேலைக்கு சென்ற நிலையில் அப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
மதியம் 3.30 மணியளவில் பக்கத்துக்கு வீட்டுக்காரரான சுக்ராம் பிரஜாபதி (50),பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்த அவர், கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
அப்பெண் தன்னை தற்காத்துக்கொள்ள அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் சுக்ராம் அப்பெண்ணை தடுத்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த கோடாரியை எடுத்த இளம்பெண், தற்காப்பிற்காக அவரை வெட்டியுள்ளார். இதில் சுக்ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை செய்த பிறகு, அப்பெண் ரத்தம் படிந்த கோடாரியுடன் நேராக அருகிலிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததைச் சொல்லி சரணடைந்தார்.
உயிரிழந்த சுக்ராமின் மனைவியின் புகாரின் பேரில், காவல்துறையினர் இளம்பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் தற்காப்பிற்காகவே இந்தச் செயலைச் செய்திருப்பது தெரியவந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்காப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் அவரை விடுவிக்கத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
- பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி கூறினார்.
- தன்னை காரில் அழைத்து சென்றபோது வழியில் சிகரெட் போன்ற ஒரு பொருளை வாங்கி எனக்கு கொடுத்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தனியார் ஐ.டி. நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜிதேஷ் சிசோடியா தனது பிறந்தநாளையொட்டி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் அந்த நிறுவனத்தின் பெண் மேலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மதுபானம் பரிமாறப்பட்டதாக தெரிகிறது.
இந்த விருந்து நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடந்தது. அப்போது பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி கூறினார். இதையடுத்து காரில் பெண் மேலாளர் ஏறினார். காரில் தலைமை செயல் அதிகாரி ஜிதேஷ் சிசோடியா மற்றும் பெண் உயர் அதிகாரியின் கணவர் சரோஹி ஆகியோரும் இருந்தனர்.
அப்போது மயக்க நிலையில் இருந்த பெண் மேலாளரை ஜிதேஷ் சிசோடியா, சரோஹி ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரை வீட்டில் இறங்கிவிட்டுள்ளனர். மறுநாள் மயக்கம் தெளிந்த பின், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உணர்ந்த பெண் மேலாளர், போலீசில் புகார் செய்தார்.
அதில் தன்னை காரில் அழைத்து சென்றபோது வழியில் சிகரெட் போன்ற ஒரு பொருளை வாங்கி எனக்கு கொடுத்தனர். அதை உட்கொண்ட பிறகு நான் மயக்கமடைந்தேன். பின்னர் என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளார். இதையடுத்து ஜிதேஷ் சிசோடியா, சரோஹி மற்றும் உடந்தையாக இருந்த பெண் உயர் அதிகாரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர்.
- ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
சென்னை அண்ணா பல்கலை மாணவி, அதே வளாகத்தில், கடந்தாண்டு கடந்த 2024-ம் ஆண்டு டிச. 23-ந்தேதி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அடித்து விரட்டி விட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர். பின்னர், அவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஞானசேகரனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டார்.

ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர். அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் 70க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்களை, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்தது.
பின், இந்த வழக்கு விசாரணை, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு, கடந்த மார்ச் 7-ந்தேதி மாற்றப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள், கடந்த நிறைவு பெற்றதை அடுத்து, கடந்த மே 28-ந்தேதி ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜூன் 2-ந்தேதி தண்டனை விபரங்களை நீதிமன்றம் அறிவித்தது.
ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது என நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்தார்.
இந்த தீர்ப்பை முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்றனர். விரைவான விசாரணைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பின், ஞானசேகரன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
சென்னை காவல் ஆணையரின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஞானசேகரனின் தாயார் கங்காதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அடிப்படையாக வைத்தே ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாகவும், அந்த வழக்கில் அவருக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், ஞானசேகரனுக்கு எதிராக திருட்டு உள்ளிட்ட 29 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தீர்ப்பு அளிக்க தாமதம் ஆனாலும் குற்றவாளிக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது அனைத்து தரப்பிலும் வரவேற்கப்பட்டது.
- வழக்கு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை பொதுவெளியில் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே காணாமல் போனது.
- அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை பொதுவெளியில் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, அதில் இருந்த 16 முக்கியமான கோப்புகள் மாயமாகியுள்ளன.
இதில் டொனால்ட் டிரம்ப் தொடர்பான புகைப்படங்களும் அடங்கும் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதித்துறையின் இணையதளத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ஆயிரக்கணக்கான பக்கங்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டன. இதில் டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இடம்பெற்றிருந்தனர்.

ஆனால், சனிக்கிழமை காலையில் பார்த்தபோது, அதில் குறைந்தது புகைப்படங்கள் உள்ளிட்ட 16 கோப்புகள் நீக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மாயமான கோப்புகளில் ஒன்று, ஜெப்ரி எப்ஸ்டீன், டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்ப் மற்றும் கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படமாகும்
நிர்வாணப் பெண்களின் படங்கள் மற்றும் எப்ஸ்டீனின் இடத்தில் எடுக்கப்பட்ட சில ரகசிய புகைப்படங்களும் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோப்புகள் எதற்காக நீக்கப்பட்டன அல்லது தவறுதலாக நீக்கப்பட்டனவா என்பது குறித்து அமெரிக்க நீதித்துறை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.
இன்னும் என்னவெல்லாம் மறைக்கப்படுகின்றன? அமெரிக்க மக்களுக்கு வெளிப்படைத்தன்மை தேவை என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
யார் இந்த எப்ஸ்டீன்?
ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
இதையும் படியுங்கள்: கம்போடியா உடனான மோதல் எதிரொலி: 1,000 பள்ளிகளை மூடியது தாய்லாந்து
2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.
2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

'எப்ஸ்டீன் கோப்புகள்'
ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என அழைக்கப்படுகின்றன.







