IPL 2025: முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா RCB அணி?

புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது.
IPL 2025: முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா RCB அணி?
Published on

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், ஒரு வாரம் கழித்து (மே 17-ம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி-கேகேஆர் இடையிலான போட்டி மழையினால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆர்சிபி, கேகேஆர் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

இன்று பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மற்றும் டெல்லி - குஜராத் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் பஞ்சாப் அல்லது டெல்லி அணிகள் தோல்வி அடைந்தால், பெங்களூரு முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விடும்.

பெங்களூரு முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெறும் என்று அந்த அணியின் ரசிகர்கள் இன்றைய போட்டிகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com