21 பந்தில் 62 ரன் - இஷான் கி‌ஷனுக்கு ரோகித் சர்மா பாராட்டு

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இஷான் கிஷானை கேப்டன் ரோகித் சர்மா பாராட்டி உள்ளார். #IPL2018 #MIvKKR
21 பந்தில் 62 ரன் - இஷான் கி‌ஷனுக்கு ரோகித் சர்மா பாராட்டு
Published on

ஐ.பி.எல். தொடரின் 41-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்தது. இஷான் கி‌ஷன் 21 பந்தில் 62 ரன்னும் (5 பவுண்டரி, 6 சிக்சர்), பென் கட்டிங் 9 பந்தில் 24 ரன்னும், (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.1 ஓவரில் 108 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 102 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும். அந்த அணி கொல்கத்தாவை மீண்டும் வீழ்த்தியது. வெற்றி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியிருப்பதாவது:-


மும்பை அணி வீரர்கள் ஒன்றாக இணைந்து மீண்டும் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இஷான் கி‌ஷனின் ஆட்டம் பிரமிப்பாக இருந்தது. அவர் பந்துகளை எந்தவித பயமும் இல்லாமல் ஆடியது. இந்த ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்தது. அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார். இந்த வாய்ப்புக்காகத்தான் அவர் காத்திருந்தார். இதே போல பென் கட்டிங் கடைசி ஆட்டத்தில் சிறப்பாக முடித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com