

எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும் வாரம். ராசியில் சுக்கிரன் கேது சேர்க்கை உள்ளது. இதை செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார். புகழ், அந்தஸ்து, கவுரவம் அதிகரிக்கும். பேச்சில் தெளிவு ஏற்படும். இடம், பொருள், ஏவல் அறிந்து தன்மையாக பேசி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட பண வரவு உண்டாகலாம். இதுவரை கூட்டுத் தொழிலில் இருந்த மாற்றுக் கருத்து மறையும். தொழில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். சொத்துக்களின் மதிப்பு உயரும். குடும்ப உறவில் இருந்த மன கசப்பு நீங்கும். எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். திருமணத் தடை அகலும். அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். உடல் நலம் சீராகும். சொத்துக்கள் மீதான டாக்குமெண்ட் பிரச்சினை தீரும். ஆடி மாத வெள்ளிக்கிழமை சிவ சக்தியை வழிபடவும்.
கடுமையாக உழைக்க வேண்டிய வாரம். லாப ஸ்தானத்தில் நிற்கும் சூரியன் மற்றும் குருபகவானால் தொழிலில் வியாபாரம் பெருகும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படலாம்.புதிய சொத்துக்கள் சேரும். சிலருக்கு வாரிசு இல்லாச் சொத்து கிடைக்கும். சட்டரீதியான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். தொழில் தொடர்பானவர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்து, மனை வாங்கும் போது மூலப் பத்திரங்களை பார்த்து வாங்குவது நல்லது. தொழில் நிமித்தமான அலைச்சலான பயணங்கள் அதிகரிக்கும். கண் திருஷ்டி, செய்வினை, ஆரோக்கிய கேடு, வேலையின்மை போன்ற பாதிப்புகள் விலகும். கடன்களும், நோய்களும் குறைந்து ஆனந்தம் பெருகும். சிலர் புதிய வீடு கட்ட, வாகனம் வாங்க கடன் உதவி பெறலாம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் குல இஷ்ட தெய்வ வழிபாட்டால் விரும்பியதை அடைய முடியும்.
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய காலம். ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் ராசி அதிபதி சுக்கிரன் கேது உடன் சேர்க்கை பெற்றுள்ளார். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் நடக்கும். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து சென்றால் மனகவலைகள் நீங்கி குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். தடைபட்ட மூத்த சகோதர, சகோதரியின் திருமணம் நடைபெறும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். வயதானவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நேரத்திற்கு சாப்பிட்டு ஓய்வு எடுப்பது நல்லது. மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். ஆடி வெள்ளிக்கிழமை லலிதா சஹஸ்ரநாமம் படிக்கவும்.
மன நிறைவும், நிம்மதியும் உண்டாகும். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்க்கிறார். ஒரு ஜாதக பலனை நிர்ணயிப்பதில் கோட்சார கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. அந்த வகையில் சூரியன், குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களால் சந்தோஷம் ஏற்படும். எதிர்பார்த்த வகைகளில் பணம் வந்து சேரும். புதிய நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சேமித்த பணத்திற்கு நகையாகவோ, இடமாகவோ வாங்குவீர்கள். குல கௌரவம் உயரும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற முடியும். பங்காளித் தொல்லைகள் குறையும். அரசியல் பிரபலங்களின் நட்பு, ஆதரவு கிட்டும். தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பண வரவைத் தரும் கிரகங்கள் சில சுபங்களை தந்தாலும் ஆதிபத்திய ரீதியாக சில அசுபங்களையும் வழங்கலாம். ஏதாவது வீண் செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆடி வெள்ளிக்கிழமை சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.