ஹார்முஸ் நீரிணை விவகாரம்: ஈரானுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா

பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: ஈரானுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா
Published on

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) போக்குவரத்துக்குத் திறந்திருப்பதாகவும், அந்த முக்கியப் பாதையைக் கடக்கும் கப்பல்கள் இனி தாக்கப்படாது என்றும் ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருவதாக அந்நாட்டு மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஈரானின் உள்நாட்டு அதிகாரப் போட்டி காரணமாக ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதும் அதைக் கடைப்பிடிப்பதும் கடினமாகிவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.

சீர்குலைக்க முயற்சி:

ஈரானுடனான தற்போதைய சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் பேசிய அமெரிக்க அதிகாரிகள், இந்த வாரம் மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியதற்கு, தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்க முயன்ற ஈரானை சேர்ந்த ஒரு பிரிவினரே காரணம் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் "முடிந்துவிட்டது" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமூக ஊடகங்களில் மீண்டும் வலியுறுத்தினார். இருப்பினும், போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

கால அவகாசம்:

ஈரானுடன் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்களுக்கு அதிபர் டிரம்ப் குறைந்த கால அவகாசமே அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதவிர, பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் அதிபரிடம் பல மாற்று வழிகள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

போரின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் நீண்டகால தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் அதிகாரப் போட்டி நிலவி வருவதாகவும் அவர்கள் கூறினர்.

உலக எரிசக்தி சந்தைகளுக்கு மிக முக்கியமான நீர்வழியான ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்குத் திறந்திருப்பதாகவும், கப்பல்கள் தடையின்றி செல்லலாம் என்றும் ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com