

பஞ்சாப்பை சேர்ந்தவர் ஜஸ்மான் சேகோன்(வயது 27). இவர் கனடாவில் வசித்து வந்தார். இந்தநிலையில் வான்கூவர் அருகே சர்ரே பகுதியில் ஜஸ்மான் சேகோன் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
அவரை காரில் 2 பேர் துரத்தி சென்றனர். பின்னர் அந்த காரில் இருந்து இறங்கிய 2 பேர், ஜஸ்மான் சேகோனை மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இந்தக் கொலை திட்டமிட்டே நடத்தப்பட்டது என்பதும், குற்றக் குழுக்களுடன் தொடர்புடையது என்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.