காந்தி ஜெயந்தியன்று சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் - இந்திய ரெயில்வே திட்டம்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு காந்தி ஜெயந்தியன்று சைவ உணவு வழங்க இந்திய ரெயில்வே திட்டமிட்டு வருகிறது. #GandhiJayanti #IndianRailways
காந்தி ஜெயந்தியன்று சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் - இந்திய ரெயில்வே திட்டம்
Published on

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இந்திய ரெயில்வே புதிய திட்டம் ஒன்றை செய்து வருகிறது. அதன்படி 2018-20 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ரெயில்களில் காந்தி ஜெயந்தி அன்று சைவ உணவு மட்டுமே வழங்கப்படும். அந்நாளை சைவ நாளாக கொண்டாட திட்டம் வகுத்து வருகிறது.

மேலும், மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட தண்டி பகுதிக்கு சபர்மதி பகுதியிலிருந்து சிறப்பு ரெயில் விடவும் திட்டமிட்டுள்ளது. ரெயில் டிக்கெட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவப்படம் அச்சிடப்படும் என கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com