கிம் உடனான சந்திப்பை முடித்துக்கொண்டு சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்

சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பை நிறைவு செய்துவிட்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். #TrumpKimSummit #SingaporeSummit
கிம் உடனான சந்திப்பை முடித்துக்கொண்டு சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்
Published on

சிங்கப்பூர் :

பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  

இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா - வடகொரியா  இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்தியா உள்பட பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு டொனால்டு டிரம்ப் சிங்கப்பூரில் உள்ள பய லேபார் விமான தளத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். #TrumpKimSummit #SingaporeSummit

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com