என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

துரோகி பட்டம் கொடுத்து மதிமுகவில் இருந்து என்னை வெளியேற்ற பார்க்கிறார் வைகோ - மல்லை சத்யா
- மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
- துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் காட்டுகிறார் என்று மல்லை சத்யா குற்றச்சாட்டு
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கு, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இருவரிடமும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இருவரும் கை குலுக்கிக் கொண்டு சமாதானம் அடைந்தனர்.
இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைகோ குற்றசசாட்டு தொடர்பாக பேசிய துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, " துரோகி பட்டம் கொடுத்து கட்சியில் இருந்து என்னை வெளியேற்ற பார்க்கிறார் வைகோ. குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் காட்டுகிறார்.
வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என சொல்லும் அளவுக்கு அவர் துணிந்துள்ளார வாரிசு அரசியலுக்காகத்தான் என வைகோ சொன்ன வார்த்தையை தாங்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.






