உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி வாலிபர் தர்ணா

குரங்குகள் சேதப்படுத்தியதற்காக புதிய வீடு எவ்வாறு கட்டித்தர முடியும் என தெரிவித்துள்ளனர்.மக்கள் நத்தம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி வாலிபர் தர்ணா
Published on

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி கணவாய்பட்டியை சேர்ந்தவர் சதீஸ்பாண்டியன் (36). இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குரங்குகள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களையும், வீட்டையும் சேதப்படுத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புதிய வீடு கட்டித் தருமாறு சதீஸ்பாண்டியன் புகார் அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை. மேலும் குரங்குகள் சேதப்படுத்தியதற்காக புதிய வீடு எவ்வாறு கட்டித்தர முடியும் என தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சதீஸ்பாண்டியன் இன்று காலை மங்கம்மாள் சாலை பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறினார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அவரை கீழே இறங்குமாறு சத்தம் போட்டனர். ஆனால் தனது வீடு சேதம் அடைந்து விட்டது. அதற்கு புதிய வீடு கட்டித்தர வேண்டும் என்று கோஷமிட்டபடி உச்சி பகுதிக்கு ஏறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நத்தம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி மற்றும் போலீசார் மைக் மூலம் அவரை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் அதனை அவர் கேட்கவில்லை. அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர் கீழே வர சம்மதித்தார். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சதீஸ்குமார் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com