என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வில் இருந்து காங்கிரஸ் விரைவில் வெளியேறும்- பொள்ளாச்சி ஜெயராமன்
- தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை.
- மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.
அனுப்பர்பாளையம்:
திருப்பூரில் இன்று அ.தி.மு.க. முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் வீடு, வீடாக சென்று விடியா ஆட்சிக்கு, உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்கிற பிரசார விளக்கக் கூட்டம் நடத்தி, தி.மு.க. ஆட்சியின் அவலங்களை தாய்மார்களிடம் எடுத்து கூறி வருகிறோம்.
கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஆகி உள்ளது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே பயமாக இருப்பதாக தாய்மார்கள் தெரிவிக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.
எங்கள் கூட்டணி, அ.தி.மு.க., தலைமையில் ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விரைவில் வெளியேறும். பின்னர் படிப்படியாக மற்ற கட்சிகளும் வெளியேறும். த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒன்றும் தெரியாது என்றார்.






