என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜி.எஸ்.டி இல்லாமல் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது- நயினார் நாகேந்திரன்
- உலகம் முழுவதும் உள்ள 63 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
- 2026 தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் அமையும்.
நெல்லை:
பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழகத்திற்கு பாக்கியில்லாமல் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
* ஜி.எஸ்.டி இல்லாமல் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது.
* உலகம் முழுவதும் உள்ள 63 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
* பிரதமர் மோடி ஆண்டுதோறும் காசியிலும், குஜராத்திலும் தமிழ் சங்கமம் நடத்துவது தமிழர்களுக்கு மிகப்பெரிய பெருமை.
* சிவகிரி இரட்டைக்கொலை, விடுதியில் பள்ளி மாணவி வன்கொடுமை என நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரிப்பு.
* சிவகிரியில் இரட்டைக்கொலையில் பிடிபட்டவர்கள் இதற்கு முன்பு 19 கொலை செய்ததாக கூறியுள்ளனர்.
* 19 கொலைகள் தொடர்பாக இதற்கு முன்பு கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகளா?
* சிவகிரி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தான் குற்றவாளி என்பதில் நம்பிக்கை இல்லை.
* 2026 தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் அமையும்.
* 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.






