

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் லேசான காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.