தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சேர்ந்த விரக்தியில் பேசுகிறார் இ.பி.எஸ்- திருமாவளவன்

கொள்கை அடிப்படையில் முரண்பட்டு நிற்கும் அதிமுக-பாஜக தேர்தல் ஆதாயத்திற்காக இணைந்துள்ளது.
தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சேர்ந்த விரக்தியில் பேசுகிறார் இ.பி.எஸ்- திருமாவளவன்
Published on

திண்டுக்கல் மாவட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக கூட்டணி பலமில்லாததால், பொருந்தாக் கூட்டணியாக இருப்பதால் பழனிசாமி விரக்தியில் உள்ளார்.

கூட்டணி மீதான விரக்தியால் தனிநபர் விமர்சனங்களை பழனிசாமி முன்வைக்கிறார் என நினைக்கிறேன்.

கொள்கை அடிப்படையில் முரண்பட்டு நிற்கும் அதிமுக-பாஜக தேர்தல் ஆதாயத்திற்காக இணைந்துள்ளது.

பாஜக, அமமுக, பாமக ஆகியவை முன்பு அதிமுகவை விமர்சித்தாலும் தேர்தலுக்காக மட்டுமே இப்போது இணைந்துள்ளன.

பிரேமலதா திமுக கூட்டணியில் சேர்ந்த ஏமாற்றம், விரக்தி, ஆத்திரத்தில் பழனிசாமி பேசி வருகிறார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com