

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார். வேட்பு மனு பரிசீலனையின்போது, தமிழிசையின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் தமிழிசையின் மனு ஏற்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக வேட்பாளர் கனிமொழி பொய்யான தகவல்களை கூறி பிரசாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.