விஷம் குடித்து பெண் தற்கொலை- 5 பேர் மீது வழக்குப்பதிவு

அரிமளத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர்-மாமனார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

அரிமளம்:

அரிமளம் ஒன்றியம் கே.ராயவரம் அருகே உள்ள தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகள் யோக பிரியா. இவருக்கும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயல் கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அரவிந்தன் தொழில் செய்வதற்காக ரூ.10 லட்சம் மற்றும் 15 பவுன் நகைகளை வாங்கி வருமாறு யோகபிரியாவை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தாராம். 

இதனையடுத்து யோகபிரியாவின் தந்தை 15 பவுன் நகை கொடுத்து மகளை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதனிடையே மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் அரவிந்தன் வேறுஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு யோக பிரியாவை மீண்டும் வீட்டை விட்டு வெளியே அனுப்பினராம். இதனால் மனவேதனை அடைந்த யோக பிரியா தந்தை வீட்டில் உள்ள குளியலறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

இதைபார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி விசாரணை நடத்தி யோகாபிரியாவின் கணவர் அரவிந்தன், மாமனார் செல்வமணி, மாமியார் ரேணுகாதேவி, நாத்தனார் சத்யபிரியா மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com