சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சோதனை

பாலியல் வழக்கில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையில் இருந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவசங்கர் பாபா
சிவசங்கர் பாபா
Published on

சென்னை:

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர்பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது 4 போக்சோ வழக்குகளும், பெண்கள் வன்கொடுமை வழக்கு ஒன்றும் உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவசங்கர் பாபா பள்ளியில் ரகசிய அறை ஒன்று இருந்தது. அதை திறந்து இதுவரை போலீசார் சோதனை நடத்தாமல் இருந்தனர்.

சிவசங்கர் பாபா கைரேகை மூலமாகவே திறக்கக் கூடியதாக இருந்த அந்த அறையை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை அழைத்து சென்று திறந்துள்ளனர்.

அந்த அறையில் இருந்த ஆவணங்களை போலீசார் சோதனை செய்துள்ளனர். அதனை கைப்பற்றி விசாரணையும் நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில் சிவசங்கர் பாபா வழக்கில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com