உள்நாட்டு யுத்ததில் ரசாயண குண்டுகளை சிரிய ராணுவம் பயன்படுத்தியது உண்மையே - ஐ.நா அறிக்கை

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தத்தில் சிரிய ராணுவம் ரசாயண குண்டுகளை பயன்படுத்தியது ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு யுத்ததில் ரசாயண குண்டுகளை சிரிய ராணுவம் பயன்படுத்தியது உண்மையே - ஐ.நா அறிக்கை
Published on

ஜெனீவா:

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தத்தில் சிரிய ராணுவம் ரசாயண குண்டுகளை பயன்படுத்தியது ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சிரிய அரசுக்கு எதிராக போரிட்டு வரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நோக்கில் அதிபர் அசாத் அரசு, ரஷ்யாவின் உதவியுடன் சண்டையிட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கான் ஷேக்கோம் எனும் இடத்தில் ரசாயண குண்டுகள் மக்கள் மீது வீசப்பட்டதில் 80 பேர் இறந்தனர்.

இந்த ரசாயண குண்டுகளை வீசியது நாங்கள் இல்லை என சிரிய ராணுவமும், கிளர்ச்சியாளர்களும் மறுத்துவந்தது. இதனையடுத்து, ஐ.நா போர் குற்ற விசாரணை ஒன்றை நடத்த உத்தரவிட்டது. இதன் அறிக்கையின் விபரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.நா அறிக்கை 33 முறை இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதன் விவரங்களை தொகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சிரிய அரசுப்படைகள் 27 முறை குண்டுகளை வீசியுள்ளன. மேலும், ஆறு முறை வீசிய குற்றவாளி யார் என்பதை அறிய முடியவில்லை என்றும் கூறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com