என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அண்ணாமலைக்கு எதிர்ப்பு... நிர்மல் குமாரைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து வெளியேறிய திலீப் கண்ணன்
    X

    அண்ணாமலைக்கு எதிர்ப்பு... நிர்மல் குமாரைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து வெளியேறிய திலீப் கண்ணன்

    • உண்மையாக, நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம் என நிர்மல் குமார் கூறி உள்ளார்.
    • பாஜகவில் அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் வெளியேறுவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், அந்தக் கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் "என்னால் முடிந்தவரை பல சங்கடங்களைக் கடந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பயணித்தேன்! உண்மையாக, நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்" என கூறியிருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அண்ணாமலையை கடுமையாக தாக்கி இருந்தார். சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் விலகல் அறிவிப்பிற்கு பதில் அளித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ``அன்பு சகோதரர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    நிர்மல் குமாரை தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலையின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து விலகியிருக்கிறார்.

    திலீப் கண்ணன் தன் ராஜினாமா குறித்து பதிவிட்டுள்ள பதிவில், "இந்த வார் ரூம் கோஷ்டிகள் என்னைப்போல் இன்னும் எத்தனை பேரை வெளியே அனுப்ப போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். இதுவரை இந்த கட்சிக்கு என்னால் முடிந்த அளவிற்கு 100 சதவீதம் உழைத்திருக்கிறேன். இத்தனை காலம் என்னோடு பயனித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    தமிழக பாஜகவில் அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் வெளியேறுவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×