என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திமுக தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவு: அண்ணா- கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், திமுக தலைவராக 6வது ஆண்டில் அடுயெடுத்து வைத்ததை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
Next Story






