கம்பத்தில் ஆலங்கட்டி மழை - மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் பொதுமக்கள் இருளில் தவிப்பு

கம்பத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆலங்கட்டி மழை பெய்தது. மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் பொதுமக்கள் இருளில் தவித்தனர்.
சூறைக்காற்றில் மின்கம்பம் முறிந்து கிடக்கும் காட்சி.
சூறைக்காற்றில் மின்கம்பம் முறிந்து கிடக்கும் காட்சி.
Published on

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாகவே பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

இந்த ஆண்டு கோடை மழை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. சாரல் மழை பெய்தபோதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்த நிலையில் நேற்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. மேலும் பலன் தரும் நிலையில் இருந்த ஏராளமான வாழைகள் காற்றுக்கு சேதம் அடைந்தது.

பல இடங்களில் மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இருந்தபோதும் காலைவரை மின் வினியோகம் இல்லை. இதனால் இரவு முழுவதும் இருளில் தவித்தனர்.

சமீப காலமாக கோடை மழையில் காற்றின் வேகமே அதிகமாக உள்ளது. மழைப்பொழிவு போதிய அளவு இல்லை. சூறாவளி காற்று சுழன்று வீசுவதால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

மேலும் செங்கல் காளவாசலில் வைக்கப்பட்டிருந்த செங்கலும் கரைந்து ஓடியதால் செங்கல் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com