சிங்கப்பூரிலிருந்து வந்து முதல் வாக்கை பதிவு செய்த முதல்முறை வாக்காளர்

எனது தந்தை படித்த பள்ளியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருப்பதால் எனக்கு மேலும் ஆர்வமாக இருந்தது.எனது தந்தை படித்த பள்ளியை பார்த்துவிட்டு அங்கேயே எனது முதல் வாக்கை பதிவு செய்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.
சிங்கப்பூரிலிருந்து வந்து முதல் வாக்கை பதிவு செய்த இளம் பெண் (நடுவில் நிற்பவர்).
சிங்கப்பூரிலிருந்து வந்து முதல் வாக்கை பதிவு செய்த இளம் பெண் (நடுவில் நிற்பவர்).
Published on

பாகூர்:

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று ஓட்டு போட்டு வருகின்றனர்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் வாக்குச்சாவடியில் சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய குடியுரிமை பெற்ற இளம் வாக்காளர் ஆறுமுகம் புவியரசி (வயது18) தனது தாய் ஆறுமுகம் மாலதியுடன் வந்து தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.

இதற்காக அவர் ரூ.50 ஆயிரம் செலவு செய்து சிங்கப்பூரிலிருந்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்து, பின்னர் அங்கிருந்து கார் மூலமாக புதுச்சேரி கிருமாம்பாக்கம் ஓட்டு சாவடிக்கு வந்து தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்:-

நான் சிங்கப்பூரில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்து வருகிறேன். இந்தியாவில் நடைபெறும் தேர்தலை ஆர்வமாக கண்காணித்து வந்தேன். தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பது எனது ஆசை. இதற்காக காத்திருந்தேன்.

எனது தந்தை படித்த பள்ளியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருப்பதால் எனக்கு மேலும் ஆர்வமாக இருந்தது.

எனது தந்தை படித்த பள்ளியை பார்த்துவிட்டு அங்கேயே எனது முதல் வாக்கை பதிவு செய்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com