

புதுச்சேரி:
புதுச்சேரியில் வரும் 9-ந்தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நடவடிக்கைகள் காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 7-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை மூடப்படும். இந்த தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள சிபிஎஸ்சி வாரியத் தேர்வுகள் சிபிஎஸ்சி வாரியத்தின் கால அட்டவணைப்படி எந்த மாற்றமும் இன்றி நடைபெறும்.
சிபிஎஸ்இ தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் திட்டமிட்டபடி தங்கள் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.