மணக்குள விநாயகர் என்ஜீனியரிங் கல்லூரி மாணவிகள் வெற்றி

புதுவை மதகடிப்பட்டு, மணக்குளவிநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் ஐ.சி.டி. அகாடமியின் யூத்டாக் 2022 அரையிறுதி சுற்றுக்கான போட்டி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்றார்.
அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி.
அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை மதகடிப்பட்டு, மணக்குளவிநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் ஐ.சி.டி. அகாடமியின் யூத்டாக் 2022 அரையிறுதி சுற்றுக்கான போட்டி நடந்தது.

இதில் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி முதலாமாண்டு மாணவி ஆஷிகா முதல் பரிசினை பெற்று கோவையில் நடைபெறும் இறுதி சுற்றிற்கு தேர்வு செய்யப்பட்டார். இறுதி ஆண்டு மாணவி ரோஷின் 2-வது பரிசை பெற்றார். அரையிறுதியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவையில் நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஐ.சி.டி. அகாடமி யூத் ஐகான் விருதும் சிங்கப்பூர் கல்வி சுற்றுலா சென்று வரும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்வி குழும மற்றும் மேலாண் இயக்குநர் தலைவர் தனசேகரன் சிறப்புரை ஆற்றினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். சென்னை ஐ.சி.டி.அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி அரி பாலச்சந்திரன் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

எச்.சி.எல். மேலாளர் டீனா, கெம்பேப் குழும தலைவர் விஜயகுமார், திறன் கையகப்படுத்துதல் தலைவர் விஜயகுமார், ஓமேகா ஹெல்த்கேர் மேனேஜ் மென்ட் மூத்த இயக்குனர் சேவியர் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு வெற்றியாளர்களை தேர்வு செய்தது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், அகாடமிக் டீன்கள் அன்புமலர் அறிவழகர், தேர்வு கட்டுப்பா ட்டாளர் ஜெயக்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்பு துறை அதிகாரி கைலாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐ.சி.டி.அகாடமி தணிக்கை பிரிவு தலைவர் நரேந்திர கோபால் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com