அட்டர்னி ஜெனரல், சொலிசிடர் ஜெனரலின் பதவிக்காலம் நீட்டிப்பு

அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மற்றும் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரது பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால்
அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால்
Published on

புதுடெல்லி:

மத்திய அரசின் தலைமை வக்கீலாக (அட்டர்னி ஜெனரல்) பதவி வகித்து வருபவர் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் கே.கே. வேணுகோபால். இவரது பதவிக் காலம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், அட்டர்னி ஜெனரலான கே.கே. வேணுகோபாலின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், சொலிசிடர் ஜெனரலாக துஷார் மேத்தாவின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலம் ஜூலை 1 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மத்திய அரசுக்கு புதிதாக 5 துணை சொலிசிடர் ஜெனரல்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த இதற்கான ஒப்புதலை அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com