பப்புவா நியூ கினியா தீவில் 6.9 ரிக்டரில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

பப்புவா நியூ கினியா தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியா
பப்புவா நியூ கினியா
Published on

ஜகார்த்தா:

இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் வெளியாகவில்லை. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com