பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்

சிவசங்கர் பாபா பள்ளி, ஆசிரமத்திற்கு செல்லக்கூடாது என்றும், சாட்சியங்களை கலைக்க முயன்றால் ஜாமீன் மனு ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
சிவசங்கர் பாபா
சிவசங்கர் பாபா
Published on

சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் தனக்கு ஜாமீன் வழங்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் அவர் தனது பள்ளி, ஆசிரமத்திற்கு செல்லக்கூடாது என்றும், சாட்சியங்களை கலைக்க முயன்றால் ஜாமீன் மனு ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்...செல்வாக்கில் வீழ்ச்சியை தொடர்ந்து வருமானத்திலும் கடும் சரிவை சந்தித்த காங்கிரஸ்

X

Maalai Malar
www.maalaimalar.com