மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய்க்கு கொரோனா

தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள நித்தியானந்த் ராய் வலியுறுத்தியுள்ளார்.
நித்தியானந்த் ராய்
நித்தியானந்த் ராய்
Published on

புது டெல்லி:

மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நித்தியானந்த் ராய் கூறியதாவது:-

கடந்த 2 நாட்களாக எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா பாசிடிவ் என தெரிய வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.

இவ்வாறு நித்தியானந்த் ராய் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com