பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு 30 மடங்கு உயர்வு

பெங்களூர் தெற்கு தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் 1991லிருந்து பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.ரூ.4.1 கோடி சொத்து மதிப்பு கொண்ட பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு சொந்தமாக வீடு, கார் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு 30 மடங்கு உயர்வு
Published on

பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு, 5 ஆண்டுகளில் 3150% உயர்ந்துள்ளது.

2019 பாராளுமன்ற தேர்தலில் தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு ₹13.46 லட்சமாக இருந்த நிலையில், தற்போது தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ₹4.10 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். டெல்லி, பெங்களூரு காவல் நிலையங்களில் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சூர்யாவின் மொத்த சொத்து ரூ.4.10 கோடியில் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.1.99 கோடி முதலீடு மற்றும் ரூ.1.79 கோடிக்கு மேல் பங்குகளில் முதலீடு ஆகியவை அடங்கும்.

ரூ.4.1 கோடி சொத்து மதிப்பு கொண்ட பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு சொந்தமாக வீடு, கார் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர் தெற்கு தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் 1991லிருந்து பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு தொடர்ந்து எம்பியாக தேர்வாகி வந்த அனந்த குமார் கடந்த 2018ல் உயிரிழந்த நிலையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேஜஸ்வியை பாஜக களமிறக்கியது. இவர் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-லிருந்து கட்சிக்கு வந்தவர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையில் நெருங்கிய நண்பரான இவர், பாஜக இளைஞரணியின் தேசிய தலைவராக இருந்திருக்கிறார்

பெங்களூர் சட்ட ஆய்வுகள் கழகத்தின் முன்னாள் மாணவரும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞருமான இவர், பா.ஜ.க தலைவர் மற்றும் பசவனகுடி ரவி சுப்ரமணியாவின் மருமகன் ஆவார். என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com